பொள்ளாச்சி அருகே அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

பொள்ளாச்சி அருகே அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

பொள்ளாச்சி அருகே அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி:ஆனைமல அடுத்து உள்ள ஆழியார் அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்நிலையில் அணையின் நீர் இருப்பிற்கு ஏற்ப முதற் போகம் இரண்டாம் போகம் என விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது இரண்டாம் பாகத்திற்கான தண்ணீர் வழங்குவதில் முறைகேடு உள்ளது எனக் கூறி விவசாயிகள் ஆனைமலை அடுத்த ஆழியார் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனா். விவசாயத்திற்கான தண்ணீர் திறப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்கும் கேட்டபோது உரிய ஆவணங்கள் தராமல் இழுத்தடிப்பதாகவும் வாய்மொழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதன் அளவுகளை முறைகேடாக கூறுவதாகவும் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் உரிய தண்ணீர் வழங்கவில்லை என்றால் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகும் என வேதனை தெரிவித்த விவசாயிகள் உரிய முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story