சாலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு - காவல்துறை வழக்கு பதிவு !

சாலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு - காவல்துறை வழக்கு பதிவு !

வழக்கு பதிவு

சாலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், பாண்டமங்கலம் அருகே உள்ள தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் வயது 48. இவரது மனைவி செல்வராணி வயது 42. செந்தில்குமார் ஏப்ரல் மூன்றாம் தேதி மதியம் 2:30 மணி அளவில், கரூரை அடுத்த மொச்ச கொட்ட பாளையம் பகுதியில் உள்ள சுபிக்ஷா ஹோட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த செந்தில்குமாரின் மனைவி செல்வராணி, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த செந்தில்குமார் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story