கலைமாமணி கலைஞர்களுக்கு கட்டண விலக்கு - கலைஞர்கள் வரவேற்பு

கலைமாமணி கலைஞர்களுக்கு கட்டண விலக்கு - கலைஞர்கள் வரவேற்பு

பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி சோமசுந்தரம்

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் அவரது உதவியாளர் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி சோமசுந்தரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானிய கோரிக்கை நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணம் இன்றி செல்ல அனுமதியும், அவர்களுக்கு 60 வயது நிறைவடைந்திருப்பின் அவருடன் உதவியாளர் ஒருவரும் கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறை சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி சோமசுந்தரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு உரிய கௌரவத்தையும் மரியாதையும் அளித்துள்ளது. கடந்த வாரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் 50 சதவீத கட்டணத்தில் பயணிக்கலாம் அவர்களது கலைப் பொருட்கள் லக்கேஜ் கட்டணம் இல்லாமல் கொண்டு செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியானது. அரசின் இத்தகைய அறிவிப்புகள் கலைஞர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

Tags

Next Story