சேலையில் பற்றிய தீ - சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு !

சேலையில் பற்றிய தீ - சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு !

விசாரணை 

சமையல் செய்யும்போது சேலையில் பற்றிய தீயால் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

சமையல் செய்யும்போது சேலையில் பற்றிய தீ. சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், பூக்காரத் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி வெண்ணிலா வயது 48. இவர் ஏப்ரல் 2-ம் தேதி மதியம் ஒரு மணி அளவில், வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது சேலையில் பற்றிய தீ மலமலவென பற்றியது.

இந்த தீ விபத்தில் வெண்ணிலாவுக்கு 10 சதவீதம் வரை உடலில் தீ காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த வெண்ணிலா சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 8 மணி அளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வெண்ணிலாவின் கணவர் முருகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக உயிரிழந்த வெண்ணிலாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story