மயிலாடுதுறை:அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு - 23 வழக்குகள் பதிவு

மயிலாடுதுறை:அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு - 23 வழக்குகள் பதிவு

பட்டாசு 

உச்ச நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு மற்றும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில், பட்டாசு வெடிப்பதை வரைமுறைப்படுத்த, உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கு, காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை ஒரு மணி நேரமும். இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இதை மீறி பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில், விதிமீறி பட்டாசு வெடித்ததாக மாவட்ட காவல்துறையினரால், 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story