சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது

சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 1300 பறிமுதல்.
சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு ரூபாய் 1300 பறிமுதல். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சவரிமுடி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தின் பின்புறம் பணம் வைத்த சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, சபரி முடி தெருவை சேர்ந்த முருகேசன், கார்த்திகேயன், குணசேகரன், மகேஸ்வரன், நவநீத கிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 1300-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags

Next Story