பொள்ளாச்சி அருகே கவியருவியில் வெள்ளப்பெருக்கு

பொள்ளாச்சி அருகே ஆழியாரில் உள்ள குரங்கு கருவி எனப்படும் கவியருவியில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் பகுதியில் வால்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது குரங்கு கருவி எனப்படும் கவி அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை திருப்பூர் ஈரோடு சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களான கேரள மற்றும் கர்நாடகத்தில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம்..

இந்நிலையில் 4 மாதங்களாக தண்ணீர் வறட்சி காரணமாக குரங்கு அருவிக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே குரங்கருவி எனப்படும் கவியருவியை வனத்துறையினர் மூடி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது நான்கு மாதங்களுக்கு பிறகு பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான மானாம்பள்ளி சக்தி எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குரங்கு அருகில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது..

Tags

Next Story