பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது

சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூ 1,000 பறிமுதல். கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைகரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 12 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், தாந்தோணி மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,சவரிமுத்து தெருவில், நாகராஜ் என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. நாகராஜ் வீட்டில் சூதாடிய, சவரிமுடி தெருவை சேர்ந்த குணசேகரன், கார்த்திகேயன், ரவிச்சந்திரன் மற்றும் திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.1,000-யும் பறிமுதல் செய்தனர். 4- பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Tags

Next Story