தரங்கம்பாடியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

தரங்கம்பாடி புனித தெரசா மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 255 விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி புனித தெரசா மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார். 255 மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


Tags

Next Story