அமராவதி ஆற்று படுகையில் சூதாட்டம் - 4 பேர் கைது.

அமராவதி ஆற்று படுகையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சங்கரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதி மாலை 4 மணியளவில், கரூர் நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அமராவதி ஆற்று படுகையில் பணம் வைத்து சூதாடுவது உறுதி செய்யப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் வ உ சி தெருவை சேர்ந்த ஆனந்த், பிரதீப் குமார், மணிதுரை, பிரபு ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர். பிறகு நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிறகு அவர்களை காவல் நிலைய பினையில் விடிவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story