காந்தி கிராமத்தில் சூதாட்டம் - 3 பேர் கைது

காந்தி கிராமத்தில் சூதாட்டம் - 3 பேர் கைது
சூதாட்டம் 
தாதோணிமலை அருகே தெற்கு காந்தி கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தெற்கு காந்திகிராமம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தமிழ் செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ரமணா கார்டன் பகுதியில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர், ராயனூர் இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த சிம்சன், கரூர், ஏமூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், மணவாடி அருகே பெருமாள்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த முத்து விஜயன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்

Tags

Next Story