மாவடியான் கோவில் அருகே சூதாட்டம்: இருவர் கைது

மாவடியான் கோவில் அருகே சூதாட்டம்: இருவர் கைது

கோப்பு படம் 

மாவடியான் கோவில் தெருவில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

மாவடியான் கோவில் தெருவில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ.200 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மாவடியான் கோவில் தெரு பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 13-ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் மாவடியான் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்த சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் மற்றும் வ உ சி தெருவை சேர்ந்த ராதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ. 200-யும் பறிமுதல் செய்தனர்.

இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story