பணம் வைத்து சூதாட்டம் - 5 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் - 5 பேர் கைது

சூதாட்டம் 

ஒத்தையூர் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தாந்தோனிமலை காவல் எல்லை குட்பட்ட, ஒத்தையூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஒத்தையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள உப்பிலியப்பர் கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது

. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட டி.செல்லாண்டி பாளையம், இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, கரூர் உழவர் சந்தை, காவேரி தோப்பு பகுதியைச் சேர்ந்த கணேஷ்,கரூர் ராமானுஜர் நகர் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், கரூர் சின்ன ஆண்டாங் கோயில், ஃபர்ஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், கரூர் படிக்கட்டுத்துறை இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் ஆயிரத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story