கரூர் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது !

கரூர் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் 12: 30 மணி அளவில், கரூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வேலாயுதம்பாளையம் புதூர், ராமா கவுண்டன் தோட்டத்தில் பணம் வைத்த சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ராம கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், கோவிந்தம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன், ஆண்டாங்கோவில் அருகில் உள்ள தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி அப்பிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.250-ம் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story