கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா

கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா

கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எலிமேடு கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஏலியம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஜாத்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

முன்னதாக, ஏரிக்கரையில் உள்ள குலுங்கி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க சாமியாடிகள் ஆவேசத்துடன் முன்னே செல்ல, மஞ்சளாடை அணிந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து பக்தியுடன் ஓம்சக்தி பராசக்தி என்று முழங்கியபடி முக்கிய வீதிகள் வழியாக சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலம் முடிந்ததும், பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களை கொண்டு கங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு தயிர், இளநீர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு கங்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.

இந்த ஜாத்திரை திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர், ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story