பொது தொழிலாளர் சங்கத்தின் மே தின விழா கொண்டாட்டம்

பொது தொழிலாளர் சங்கத்தின் மே தின விழா கொண்டாட்டம்

மே தின கொண்டாட்டம்

மயிலாடுதுறை பொது தொழிலாளர் சங்கத்தினரின் 39 ஆவது ஆண்டு மே தின விழா முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 39 ஆம் ஆண்டு உழைப்பாளர் தின விழா அச்சங்கத்தின் தலைவரும் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் முதல் ஏராளமானோர் சிலம்பம் சுற்றி அசத்தினர். அப்போது ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி இளைஞர் விமல் என்பவர் ஒற்றைக் கையால் சிலம்பம் சுற்றி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து பொதுத் தொழிலாளர் சங்கத்தின் கொடியினை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் அவர் ஒரு கையால் சிலம்பம் சுற்றிய மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இவ்விழாவில் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மூவலூர் மூர்த்தி, முருகமணி, ஞான இமய நாதன் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் உட்பட ஏராளமான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story