மயிலாடுதுறை ஆயுதப்படை பெண் காவலர் மறைவிற்கு அரசு மரியாதை

மயிலாடுதுறை ஆயுதப்படை பெண் காவலர் மறைவிற்கு அரசு மரியாதை

ஆயுதப்படை காவலர்

மயிலாடுதுறை ஆயுதப்படை காவலர் செல்வி கமலி மறைவுக்கு திருவாரூர் மாவட்டம் மாவூரில் அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், ஆயுதப்படையில் பணிபுரிந்த செல்வி. கமலி (2022 Batch). சென்னை ஆவடியில் உள்ள த.சி.கா 5-ம் அணியில் தங்கி தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடி வந்துள்ளார். இவருக்கு சிறுநீரக நோய் தொற்று காரணமாக உடல் நிலை சரியில்லாமல் கடந்த 10.05.2024 முதல் மருத்துவ விடுப்பில் கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், மேல் சிகிச்சைக்காக 12.05.2024 முதல் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் 13.05.2024 தேதி பகல் சுமார் 13.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இறந்த காவலரின் உடல் 14.05.2024 தேதி மதியம் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், மாவூரில் காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story