கரூர் : கலைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கரூரில் பிரார்த்தனை,பாடலுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயத்தில் கிருஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பலியுடன் நள்ளிரவில் நடைபெற்றது.

சர்ச் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.பங்குத் தந்தை மற்றும் உதவி பங்குத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடியும், ஜெபங்கள் செய்தும் கிருஸ்து பிறப்பின் பெருமைகளை எடுத்துச் சொல்லி வழிபாடு நடத்தினர்.

இயேசு பிரான் பிரார்த்தனை பாடல்களை பாடும்போது சிறுமிகள் அதற்கு ஏற்றவாறு நடன அசைவுகளை அமைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட வந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் கவர்ந்தனர். நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சிறப்பு திருப்பலியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வானவேடிக்கையுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

Tags

Next Story