பொள்ளாச்சி அடுத்துள்ள போடிபாளையம் பகுதியில் குண்டம் திருவிழா..

பொள்ளாச்சி அருகே போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் 50 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழைமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.. சுற்று வட்டார 18 பட்டி கிராம மக்களும் அம்மனை வழிபட்டு வருகின்றனர் ஆண்டு தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 8 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது அதைத் தொடர்ந்து மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில், அவிநாசி கொடுமுடி திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கொலு வைத்து கொடிமரம் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தும் குண்டம் திருவிழாவிற்காக கோயில் வளாகத்தில் நேற்று இரவு அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது.. அதைத் தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பூ குண்டம் அருகே வான வேடிக்கையுடன் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.. இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்ரகாளியம்மன் தாயே போற்றி என சுமார் 50 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.. விழாவை காண சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனை தரிசித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story