ரவுடி கொலை வழக்கில் 3 பேருக்கு குண்டாஸ்

ரவுடி கொலை வழக்கில் 3 பேருக்கு குண்டாஸ்

குண்டாஸ்

மயிலாடுதுறையில் மார்ச் 20 ஆம் தேதி இரவு கலைஞர் காலனி சேர்ந்த ரவுடி அஜித்குமார் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொன்றது. அது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு ஆறு பேர் குண்டாசில்- மேலும் 3பேர் குண்டாசில் அடைப்பு.
மயிலாடுதுறை நகரில் மார்ச் 20-ஆம் தேதி ரவுடி அஜித்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 6 பேர் ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் சிறையில் உள்ள சத்தியநாதன்(20), நாகராஜ்(27), சத்தியசீலன்(23) ஆகிய 3 பேர் மீதும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி மீனா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு நகலை மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி எடுத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் ஒப்படைத்தார்.

Tags

Next Story