பொள்ளாச்சி மண் கண்டீஸ்வரர் மடாலயத்தில் குருபூஜை பெருவிழா

பொள்ளாச்சி மண் கண்டீஸ்வரர் மடாலயத்தில் குருபூஜை பெருவிழா
மடாலயத்தில் குருபூஜையில் கலந்து கொண்டவர்கள்
பொள்ளாச்சி அடுத்த ரமணிமுதலி புதூர் பகுதியில் மண் கண்டீஸ்வரர் மடாலயத்தில் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.

பொள்ளாச்சி அடுத்த ரமணிமுதலி புதூர் பகுதியில் மகுடேஸ்வரி உடன் அமர் மண் கண்டீஸ்வரர் மடாலயத்தில் குருபூஜை பெரு விழா நடைபெற்றது. இதில் தவத்திரு தயாநிதி அன்பு சிவனேச அடிகளார் கலந்து கொண்டு பல்வேறு யாக பூஜைகள் நடத்தி மண் கண்டீஸ்வரருக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார தீபா ஆராதனை நடத்தினார்.

பின்னர் சிவனேச அடிகளாருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் இந்நிகழ்ச்சியில் 500.க்கும் மேற்பட்ட பிற மாநிலங்களைச் சார்ந்த மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை மற்றும் வஸ்திர தானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது மற்றும் வந்திருந்த அனைத்து சாதுக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story