மயிலாடுதுறையில் சம்பா, தாளடி நெற்பயிர் அறுவடை துவக்கம்

மயிலாடுதுறையில் சம்பா, தாளடி நெற்பயிர் அறுவடை துவக்கம்

அறுவடை துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா,தாளடி நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கர் செம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த மேமாத்தூர் கிராமத்தில் விவசாயி நடராஜன் என்பவர் மாவட்டத்திலேயே முதலாவதாக இன்று தனது 10 ஏக்கர் நிலத்தில் அறுவடை பணியை தொடங்கினார். அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை பணியை மேற்கொள்ளும் இந்த விவசாயி இன்று காலை வயலில் வந்து இறங்கிய அறுவடை இயந்திரத்துக்கு தீபம் ஏற்றி, சூடம் காட்டி வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து இரண்டு அறுவடை இயந்திரங்கள் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டன.

Tags

Next Story