கரூரில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

கரூரில் கனமழை பெயதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூரில் அமைதியாக பெய்யும் கனமழை. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் கனமான மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.

குறிப்பாக மே 19,20-ம் தேதிகளில், கரூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று சற்று முன் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. வழக்கமாக இது போன்ற மழை பெய்யும் போது காற்றின் சுழற்சி அதிகம் இருக்கும். அல்லது இடி மின்னல் இருக்கும். இன்று அப்படி ஏதும் நிகழாமல் கன மழை நின்று பொறுமையாக செய்து வருகிறது. ஏற்கனவே கோடையின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இன்று அமைதியாக பெய்யும் கனமழையை கண்டு விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story