ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

கரூரில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் சொந்த வீடு இல்லா ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக திட்டம் தீட்டப்பட்டது.

இதற்கான பணிகள் செய்யப்பட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 534 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகலூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வீடு இல்லாத பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அந்தந்த பகுதியில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story