வரதட்சணை கொடுமை – கணவன் கைது

வரதட்சணை கொடுமை – கணவன் கைது

வரதட்சணை கொடுமை

மயிலாடுதுறையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவனை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மாமியாரை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள மூங்கில்தோட்டம் , முலப்பாக்கம் தெருவை சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணை தரங்கம்பாடி ராதாநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்குமார்(24) என்பவர் ஒருசில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் 5 மாதத்திற்கு முன்பு பெண்குழந்தை பிறந்தது, ராம்குமாரின் வீட்டில் வசித்துவந்துள்ளனர்.

ராம்குமாரின் வீட்டில் வரதட்சனைக் கேட்டு கார்த்திகாவை தொந்தரவு செய்துவந்தனர். மாமனார் ராமமூர்த்தி மாமியார் சரஸ்வதி ஆகியோர் வரதட்சனை இல்லாமல் வந்தது குறித்து அடிக்கடி கார்த்திகாவை திட்டியதுடன் வரதட்சனையுடன்தான் வரவேண்டும் இல்லை என்றால் உன்னை வாழவிடமாட்டோம் என்று திட்டியுள்ளனர். எதிர்த்துக்கேட்ட கார்த்திகாவின் தலைமுடியை பிடித்து இழுத்துக் கீழே தள்ளி அடித்துக் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

பெற்றோருடன் சேர்ந்து ராம்குமாரும் வரதட்சனைக் கேட்டு தகராறு செய்துள்ளார். இதுகுறித்து கார்த்திகா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 5 மாத கைக்குழந்தையுடன் காதல் மனைவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து ராம்குமாரைக் கைதுசெய்து காவலில் அடைத்தனர். மறைவான கார்த்திகாவின் மாமியார் சரஸ்வதி மற்றும் மாமனார் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story