புரட்சித் தலைவரை தவறாக பேசிய ராசாவை வாயில் வெட்டுவேன்

புரட்சித் தலைவரை தவறாக பேசிய ராசாவை வாயில் வெட்டுவேன்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

புரட்சித் தலைவரைப் பற்றி தவறாக பேசினால் ஆ.ராசாவை வாயில் வெட்டுவேன் என மயிலாடுதுறை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கண்டன உரையாற்றி பேசிய அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன பவுன்ராஜ், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பற்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆ.ராசாவால் தரக்குறைவாக பேசிவிட முடியுமா? என் உயிரே போனாலும் பரவாயில்லை என் வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் இருந்தாலும் பரவாயில்லை.

புரட்சித் தலைவரை பற்றி அவதூறாக பேசிய வாயை கிழிக்காமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக பேசினார்.

Tags

Next Story