200 மது பாட்டில்களுடன் சிக்கிய ஆசாமி

200 மது பாட்டில்களுடன் சிக்கிய ஆசாமி

மதுபாட்டில்கள் பறிமுதல் 

சீர்காழியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்து 200 பாண்டிச்சேரி மாநில 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி காவல் நிலைய சரகத்தில் மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்டு வந்த சீர்காழி, உக்கடையார் நகரை சேர்ந்த முகேஷ் (33) என்பவரிடமிருந்து 200-க்கும் அதிகமான பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்கள் வைத்து இருந்ததை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட முகேஷ்-ஐ நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story