கரூரில் மதுபோதையில் பீர்பாட்டிலால் தாக்கிய நபர் கைது

கரூரில் மதுபோதையில் பீர்பாட்டிலால் தாக்கிய நபர் கைது

காவல் நிலையம் 

கரூரில் மதுபோதையில் பீர்பாட்டிலால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜன் மகன் பத்மநாபன் வயது 30. இவர் ஜூன் 14ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், அருகில் உள்ள மக்கள் பாதை ரவுண்டான அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது கரூர், மாவடியான் கோவில் தெரு, கண்ணாரா சந்து பகுதியைச் சேர்ந்த கோபிநாத் மகன் சஞ்சய்குமார் வயது 28 என்பவர், மது போதையில் பத்மநாபன் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகில் வந்தார். அப்போது திடீரென தன்னிச்சையாக பத்மநாபனை தகாத வார்த்தை பேசி, கண்ணிமைக்கும் நேரத்தில் பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் பத்மநாபனுக்கு முன் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்மநாபன் அளித்த புகாரின் பேரில்,

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சஞ்சய் குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

கரூர் மாநகர காவல் துறையினர். சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் குமார் மீது ஏற்கனவே கரூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story