மயிலாடுதுறை : இரண்டாம் கட்டமாக  ரூ.18 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்

மயிலாடுதுறை : இரண்டாம் கட்டமாக  ரூ.18 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்

இரண்டாம் கட்டமாக    ரூ.18 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்

மயிலாடுதுறையிலிருந்து இரண்டாம் கட்டமாக    ரூ.18 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சியர்  அனுப்பி வைத்தார்.
சென்னை மக்களுக்கு உதவும்வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்களிடமிருந்து 12 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் , அனுப்பி வைக்கப்பட்டது. அதே போன்று இன்றும், இரண்டாம் கட்டமாக, 18 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் , சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு, இன்று அனுப்பி வைக்கப்பட்டது. பால் பவுடர், அரிசி மூட்டைகள், குடிநீர் பாட்டில், உடைகள் ஆகிய பொருட்களை, இரண்டு லாரிகள் மூலம் ஏற்றி சோழிங்கநல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த லாரிகளை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து அனுப்பி வைத்தார். மாவட்டவருவாய் அலுவலர் மணிமேகலை,, கோட்டாட்சியர் யுரேகா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story