கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு

கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கரூரில்,முன் எப்போதும் இல்லாத அளவு, இந்த வருடம் கோடை வெயில் 107 டிகிரி வரை கொளுத்தி எடுத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகே நீர்மோர் பந்தல் இன்று காலை திறக்கப்பட்டது. நீர் மோர் பந்தலினை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மற்றும் மண்டல தலைவர்கள் கனகராஜ், கோல்டு ஸ்பாட் ராஜா, அன்பரசன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இ

ந்த நீர் மோர் பந்தலில் இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், ரஸ்னா, மோர், தண்ணீர் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story