தொடர் மழையால் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த 4 செ.மீ மழையால் வினாடிக்கு 251 கன அடி நீர் வரத்து அதிகரித்துள்ளது, புழல் ஏரியில் 90.24 சதவீதமாக கொள்ளளவு உயர்ந்துள்ளது, பூண்டி அணை லிங்க் கால்வாயில் வரும் 135 கன அடியுடன் சேர்த்து 386 கன அடி வந்து ஏரியில் நிரம்புகிறது. புழல் ஏரியின் நீர்மட்டம் 21.20அடி அதில் 19.83 அடி நீர்இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி அதில்,2978 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 247 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது, வினாடிக்கு 182 கன அடி நீரேற்று நிலையம் மூலம் சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது.

Tags

Next Story