காதல் தகராறில் தீ வைத்த சம்பவம் - காதலியும் சிகிச்சை பலனின்றி பலி

காதல் தகராறில் தீ வைத்த சம்பவம் - காதலியும் சிகிச்சை பலனின்றி பலி

சிந்துஜா, ஆகாஷ்

மயிலாடுதுறையில் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவத்தில் காதலன் உயிரிழந்த நிலையில் காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை பாலக்கரை விஜித்ராயர் அக்ரஹாரம் சாலையில் பல்சர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கல்லூரி காதல் ஜோடி இடையே ஏற்பட்ட காதல் பிரச்சனையில் காதலி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் தீக்காயமடைந்து மயிலாடுதுறை டவுன்டேஷன் பகுதியைச் சேர்ந்த காதலன் கல்லூரி மாணவன் ஆகாஷ் கடந்த 14ஆம் தேதி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலியுமான சிந்துஜா (22) மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்த நிலையில் சிந்துஜா சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.



Tags

Next Story