போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்

போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்

முகாமை துவக்கி வைத்த அமைச்சர் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ்,மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் - 62,177 நகர்ப்புற பகுதி - 8409 கிராமப் பகுதி- 53768 மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 582 முகாம்களில் - சொட்டு மருந்து போடப்படுகிறது.

Tags

Next Story