கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஜாக்டோ- ஜியோ கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மணியன், ஆரோக்கிய பிரேம் குமார், வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு, தற்போதைய தமிழக முதலமைச்சர் சட்டமன்ற தேர்தல் காலத்திலும், ஜாக்டோ- ஜியோ மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story