ஜான் பாண்டியன் பிறந்தநாள்- கொண்டாடிய கரூர் நிர்வாகிகள்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடினார்.

ஜான் பாண்டியன் பிறந்தநாள்- கொண்டாடிய கரூர் நிர்வாகிகள் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

தலைவரின் பிறந்தநாளை கொண்டாட, கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில், கரூரில் தயாரித்து கொண்டு சொல்லப்பட்ட பிறந்தநாள் கேக்கை தலைவர் ஜான்பாண்டியன் உடன் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில், கரூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட இணைச் செயலாளர் இளவழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்நாதன், அரவக்குறிச்சி ஒன்றிய இளைஞரணி செயலாளர் அரவிந்த் பாண்டியன் மற்றும் சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளும் கொண்டு பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொண்டு சென்ற கேக்கை வெட்டி வழங்கி மகிழ்ந்தனர். மேலும், தலைவர் ஜான் பாண்டியனுக்கு கரூர் மாவட்டம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Tags

Next Story