ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

கரூரில் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கரூரில் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா. தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலைஞர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் பேருந்து நிலைய முகப்பு வாயிலிலும், ஜவகர் பஜார் பகுதியில், கரூர்-திண்டுக்கல் பழைய சாலையிலும், கட்சிக் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் நாகராஜ், பொருளாளர் தனசேகர், துணை அமைப்பாளர்கள் கோவிந்தராஜ், நாகராஜ், கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மத்திய மேற்கு நகர செயலாளர் ஜோதிபாசு, மற்றும் மத்திய நகர செயலாளர் இந்தியன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story