கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டி


கபடி போட்டி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் & பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்கான, மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவின் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கபடி போட்டி, கால்பந்து போட்டி & கையுந்து பந்து போட்டிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டிகளில் கபடி போட்டி ஆண் பிரிவுகளில் 12 அணிகளில் 144 வீரர்களும், பெண்கள் பிரிவில் 7 அணிகளில் 84 வீரர்கள் என மொத்தம் 228 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கையுந்துப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 10 அணிகளில் 120 வீரர்களும், பெண்கள் பிரிவில் 6 அணிகளில் 72 வீரர்கள் என மொத்தம் 192 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கால்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளில் 144 வீரர்களும், பெண்கள் பிரிவில் 6 அணிகளில் 108 வீரர்கள் என மொத்தம் 252 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 49 அணிகள் 672 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்
. இன்று நடைபெறும் கபடி போட்டி, கையுந்து பந்து போட்டி & கால்பந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அணிகளுக்கு வருகின்ற 16.02.24 அன்று தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், விளையாட்டு மைதான மல்யுத்த பயிற்சியாளர் மெய்ஞான மூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


