கரூர் பரணி பார்க் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று சாதனை

கரூர் பரணி பார்க் பள்ளி  மாணவி 596 மதிப்பெண் பெற்று சாதனை

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று சாதனை

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவி 596 மதிப்பெண், நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை செய்துள்ளார்.

கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மெச்சத்தகுந்த சாதனை புரிந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹரிணி சரோஜா கணேசன்- 596 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். S.கவின் விகாஸ் - 591, D.ஹரிணி – 590 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 162 மாணவர்களும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 7 மாணவர்களும், இயற்பியலில் 4 மாணவர்களும், கணினி அறிவியலில் 16 மாணவர்களும், வேதியியலில் 1 மாணவரும், கணக்குப்பதிவியியலில் 7 மாணவர்களும், வணிகக் கணிதத்ததில் 5 மாணவர்களும், வணிகவியலில் 13 மாணவர்களும், பொருளியலில் 3 மாணவர்களும், கணினி பயன்பாட்டுயியலில் 3 மாணவர்களும் மொத்தம் 59 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பரணி பார்க் பள்ளியில் பொதுத்தேர்விற்கான பயிற்சியோடு சேர்த்து, ஆந்திர ஆசிரியர்களைக் கொண்டு நீட், ஜே.இ.இ சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர்.

பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர் V.பானுப்பிரியா, துணை முதல்வர் G.நவீன்குமார், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story