கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி & ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் & நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது, தமிழ்நாடு, புதுவை உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் 40 நாடாளுமன்ற தொகுதிகளும் வெற்றி, என முப்பெரும் விழா கரூர் பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், அகில இந்திய கிசான் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேங்க் சுப்ரமணி தலைமையில், மாவட்ட ஐ.என்.டி. யு .சி. தொழிற்சங்கத் தலைவர் பழனிசாமி முன்னிலையில், கரூர் பேருந்து நிலையம் தென்புறம் உள்ள INTUC கரூர் மாவட்ட ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆட்டோ ஸ்டேன்டில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்கள், முன்னாள் நகரத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர் சுப்பன், கட்சியின் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் சுந்தரலிங்கம், மாவட்ட காங்கிரஸ் கட்சி, ஐ என் டி யூ சி கரூர் மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் சந்தனகுமார், கரூர் மாவட்ட ஐ.என். டி.யூ.சி ஆட்டோ சங்க நிர்வாகிகள் தியாகமணி, M.ராமசாமி, முத்து, வடிவேல் கனகராஜ், பழனிசாமி, பாலு, ஐ என் டி யூ சி தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story