கரூர் மாவட்டத்தில் கடந்த 4 மணி நேரத்தில் 16.10 மி.மீ மழை பதிவு

கரூர் மாவட்டத்தில் கடந்த 4 மணி நேரத்தில் 16.10 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் 4- மணி நேரத்தில் 16.10 மி.மீ மழை பதிவு. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையிலான இடைப்பட்ட 4-மணி நேரத்தில் 16.10 மில்லி மீட்டர் மழையளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழையும், தமிழகத்தில் பரவலாக மிதமான மலையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது.

அதன் அடிப்படையில் இன்று காலை 8- மணி முதல் மதியம் 12 மணி வரையிலான இடைப்பட்ட நான்கு மணி நேரத்தில் நேரத்தில் மட்டும் கரூரில் 7 மில்லி மீட்டர், குளித்தலையில் 7.1 மில்லி மீட்டர், தோகை மலையில் 2 மில்லி மீட்டர் என மொத்தம் 16.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளது. இந்த மழையின் சராசரி அளவு 1.34 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story