கரூர் மாவட்டத்தில் 23.10 மி.மீ மழை பதிவு

கரூர் மாவட்டத்தில்  23.10 மி.மீ மழை பதிவு

பைல் படம் 

கரூர் மாவட்டத்தில் 23.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. ஆயினும் மீண்டும் கோடை காலம் தமிழகத்தில் தலைதூக்கியது. வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனிடையே சென்னை வானிலை மையம் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நேற்றிரவு கரூர் மாவட்டம் தோகை மலையில் 20-மி.மீ, பாலவிடுதியில் 3.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்ட செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தில் 23.10 மில்லி மீட்டர் மழை அளவு பெய்துள்ளது எனவும்,இதனுடைய சராசரி அளவு 1.93 மில்லி மீட்டர் என தெரிவித்துள்ளது.

Tags

Next Story