கரூர் : விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர் : விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

கரூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் தொழிற்சார்ந்த பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையிட்டனர். மேலும், தங்கள் பகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், விவசாய மேம்பாடு பணிகள் குறித்தும் ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் மீது அதிகாரிகள் பதிலளித்தனர். இந்த கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியரின் பல்வேறு துறை சார்ந்த கேள்விக்கு உரிய பதிலை அளித்தனர்.

Tags

Next Story