புதிய பாலங்கள் : மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த குளித்தலை எம்.எல்.ஏ..!

புதிய பாலங்கள் :  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த குளித்தலை எம்.எல்.ஏ..!

கரூர் ஆட்சியரிடம் மனு அளித்த குளித்தலை எம்.எல்.ஏ

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலங்கள் கட்ட மாவட்ட ஆட்சியரை சந்தித்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றி வருபவர் இரா.மாணிக்கம். இவரது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைகநல்லூர், திம்மம்பட்டி ஊராட்சிகளில் உள்ள பழைய புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் குறுக்கே உள்ள பழைய பாலங்களை நீக்கிவிட்டு, புதிய பாலங்களை கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேற்று மனு அளித்தார். மனுவை கனிவுடன் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அது தொடர்பாக ஆவண செய்வதாக தெரிவித்தார்.

Tags

Next Story