ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் சிதிலமடைந்து காணப்பட்ட ஶ்ரீ அமிர்த நாராயண பெருமாள் கோவிலின் குடமுழுக்கு நடைபெற்றது


தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் சிதிலமடைந்து காணப்பட்ட ஶ்ரீ அமிர்த நாராயண பெருமாள் கோவிலின் குடமுழுக்கு நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ அமிர்த வள்ளி தாயார் சமேத ஶ்ரீ அமிர்த நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவில் சிதிலமடைந்து புகர்மண்டி காணப்பட்ட நிலையில் பாலாலம் செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று பழமை மாறாமல் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த பிரசித்தி பெற்ற கோவிலின் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடல் கடைந்து அமிர்தத்தைப் பெற்றனர். விஷ்ணு அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தைத் திறந்தபோது, ​​அமிர்தம் (அமிர்தம்) சிவலிங்க வடிவில் இருந்தது. பார்வதியின் அருள் இல்லாததே இதற்குக் காரணம் என்பதை விஷ்ணு புரிந்துகொண்டார். அவர் தனது மார்பில் இருந்த ஆபரணங்களை அகற்றி, அவற்றை பார்வதியாகக் கருதி வழிபட்டார். அப்போது அம்பாள் அபிராமி என்ற திருநாமத்துடன் தோன்றி அமிர்தம் பெற அருளினாள். விஷ்ணு தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்தார். அசுரன் ஒருவன் தேவ வேடத்தில் தேவர்களுடன் சேர்ந்து அமிர்தத்தைக் குடித்தான். அவர் அழியாமை மற்றும் தேவர்களின் வலிமையைப் பெற்றார்.

விஷ்ணு அவனை இரண்டாக வெட்டினார். அவர் அழியாதவராக இருந்ததால் அவர் தனது வாழ்க்கையை இழக்கவில்லை. அவரது உடலின் வெட்டப்பட் துண்டுகள் ராகுவாகவும் கேதுவாகவும் மாறி நவக்கிரக மண்டலத்தில் சேர்ந்தன. அபிராமி அம்மைதோன்றுவதற்கும், தேவர்களுக்கு அமிர்தம் பெறுவதற்கும் காரணமான விஷ்ணு, திருக்கடையூரில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் அமிர்த நாராயணப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். கர்ப்பிணிகள் அமிர்தவல்லி தாயாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இத்தகைய பிரசித்தி பெற்ற ஸ்ரீ அமிர்த வள்ளி தாயார் சமேத ஶ்ரீ அமிர்த நாராயண பெருமாள் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெகுவிமரிசையாக குடமுழுக்கு‌ நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கரங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமானக் கும்பத்தை அடைந்தனர். வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

Tags

Next Story