61 அடி உயரமுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

செங்குன்றத்தில் 61 அடி உயரமுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் கலச நீர் செண்டைமேளம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 61 அடி உயரமுள்ளஸ்ரீ அம்பிகை கருநிலை ஸ்துபி கோபுரம் மற்றும் ஆலய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் சோழவரம் பாடியநல்லூர் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி பராசக்தி பக்தி என பரவசத்துடன் கோசங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story