சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்

சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் நகர் முழுவதும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மயிலாடுதுறை நகரில் இரண்டு நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் சிசிடிவி காட்சிகள் மற்றும் அதன் கால் தடங்கல் வைத்தும் வனத்துறையினர் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரேக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடபாமட்டம் இருப்பதாகவும் வந்த தகவலை அடுத்து இங்கு வனத்துறையினர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மயிலாடுதுறை நகர் முழுவதும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் ,

பொதுமக்கள் குழந்தைகள் வெளியே வர வேண்டாம் என்றும் ஆடு, மாடுகளை ஏதேனும் சிறுத்தை கடித்தது தெரிந்திருந்தாலோ, சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story