மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட  மது பாட்டில்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட காருடன் போலீசார்

மயிலாடுதுறை அருகே  900 லிட்டரில் 2250 பாக்கெட் பாண்டி சாராயம் 2500 குவாட்டர் சாராய பாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கொடைவிளாகம் மெயின் ரோட்டில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விசித்திராமேரி தலைமையில் போலீசார் இன்று விடியற்காலை வாகன சோதனையில் இருந்தபோது காரைக்காலிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டரில் 2250 பாண்டி ஐஸ் சாராய பாக்கெட்டுகள் மற்றும் 2500 குவாட்டர் சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

வாகனத்தை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பாவட்டகுடி பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் ரமேஷ்(40) என்பவரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் பகுதிக்கு கொண்டு செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார்.

Tags

Next Story