காயத்ரி நகர் சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா !

காயத்ரி நகர் சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா !

கும்பாபிஷேக விழா

காயத்ரி நகர் சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

காயத்ரி நகர் சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே உள்ள குளத்துப்பாளையம் காயத்ரி நகரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று அதிகாலையில் மங்கள இசையுடன் துவங்கியது.பின்னர் யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் வெங்கமேடு, குளத்து பாளையம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story