சோமூரில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

சோமூரில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

கோயில் திருவிழா 

சோமூரில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, சோமூர் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா அதிகாலையில் மங்கல இசையுடன் துவங்கியது.பிறகு இரண்டாம் கால வேள்வி யாகம் தொடங்கி, நாடி சந்தானம்,

விமான தேவாங்க ஹோமம், மகா மங்கள பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று, புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக விழாவை மிக சிறப்பாக நடத்தினர். இதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story