அருள்மிகு சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

அருள்மிகு சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு.
அருள்மிகு சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ பங்கேற்பு. கரூர் காந்திகிராமம் தெற்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று காலை 6 மணி அளவில் கோ பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, நான்காம் கால வேள்வி தொடக்கம், தொடர்ந்து நாடி சந்தானம், திரவியம் நடைபெற்று, தொடர்ந்து தீபாரணை நடைபெற்றது. இதே வேளையில் யாக வேள்வியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை பாராயணம் செய்து, புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று பூஜைகள் செய்து, கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தினர். இன்று நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பக்தர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story